search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    தஞ்சையில் வீட்டு நிலைவாசல் சரிந்து விழுந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பலி

    தஞ்சையில் வீட்டு நிலைவாசல் சரிந்து விழுந்ததில் படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்குவாசல் சுண்ணாம்புக்காரத் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 34). தொழிலாளி. இவரது மனைவி மேகலா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 2வது மகள் ப்ரீத்தி(7) 2ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு சிறுமி பிரீத்தி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் பொருத்தப்படாமல் வைக்கப்பட்டிருந்த நிலை வாசலில் ஏறி விளையாடி உள்ளார். இதில் திடீரென நிலைவாசல் சரிந்து சிறுமி ப்ரீத்தியின் மேல் விழுந்தது. இதில் படுகாயமடைந்த பிரீத்தி அலறியுள்ளார். சத்தம் கேட்டு அவரது பெற்றோர் ஓடி வந்து பிரீத்தியை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி ப்ரீத்தி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தஞ்சை மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×