என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீபாவளி திருட்டை தடுக்க திருப்பூரின் முக்கிய பகுதிகளில் உயர் கோபுரம் அமைத்து கண்காணிப்பு - போலீசார் அதிரடி நடவடிக்கை
Byமாலை மலர்15 Oct 2021 10:05 AM GMT (Updated: 15 Oct 2021 10:05 AM GMT)
கோபுரத்தின் உள்ளே இருந்தபடி தொலை நோக்கிகள் மூலம் மக்களின் நகர்வுகளை போலீசார் கண்காணிப்பார்கள்.
திருப்பூர்:
வருகிற நவம்பர் 4-ந்தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. திருப்பூரில் பண்டிகைக் கால நெரிசலை பயன்படுத்தி, சமூகவிரோதிகள் ஜேப்படி,செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.
இவற்றை தடுக்க பண்டிகை காலங்களில் உயர் கோபுரம் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவர். தீபாவளி நெருங்குவதையடுத்து தற்போது, திருப்பூர் மாநகரில் முக்கிய பகுதிகளான குமரன் ரோடு, மாநகராட்சி அலுவலகம், தற்காலிக பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் உயர் கோபுரங்கள் அமைத்து வருகின்றனர்.
விழாக்கால ஆடை ரகங்கள் வாங்குவது, வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் வந்து செல்லும் முக்கியமான பகுதிகள், யுனிவெர்சல் தியேட்டர் ரோடு, தற்காலிக பஸ் நிலைய பகுதிகளில் 20 அடி உயரத்துக்கு கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. கோபுரத்தின் உள்ளே இருந்தபடி தொலை நோக்கிகள் மூலம் மக்களின் நகர்வுகளை போலீசார் கண்காணிப்பார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X