என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீட் தேர்வை எதிர்த்து கி.வீரமணி பிரசார பயணம்
Byமாலை மலர்15 Oct 2021 4:21 AM GMT (Updated: 15 Oct 2021 4:21 AM GMT)
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம் ஆகிய பெருநகரங்களில் அனைத்துக்கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்ற ‘நீட்’ தேர்வு எதிர்ப்புப் பிரசாரப் பயணம் கூட்டம் நடைபெற்றது.
சென்னை:
திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘நீட்’டிலிருந்து விலக்குக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதற்காக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் மாநாடுகள் நடத்துவதெனவும், மக்கள் எழுச்சிப் போராட்டங்களை மேற்கொள்வது என்றும், 21.9.2021 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம் ஆகிய பெருநகரங்களில் அனைத்துக்கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்ற ‘நீட்’ தேர்வு எதிர்ப்புப் பிரசாரப் பயணம் கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெறும் பிரசாரப் பயணக் கூட்ட விவரம் வருமாறு 17.10.2021 (காலை) வேலூர், 18.10.2021 (மாலை) ராஜபாளையம், 19.10.2021 (மாலை) திண்டுக்கல், 20.10.2021 (மாலை) நாகப்பட்டினம், 21.10.2021 (மாலை) செந்துறை என இப்பிரசாரப் பயணக் கூட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘நீட்’டிலிருந்து விலக்குக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதற்காக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் மாநாடுகள் நடத்துவதெனவும், மக்கள் எழுச்சிப் போராட்டங்களை மேற்கொள்வது என்றும், 21.9.2021 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம் ஆகிய பெருநகரங்களில் அனைத்துக்கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்ற ‘நீட்’ தேர்வு எதிர்ப்புப் பிரசாரப் பயணம் கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெறும் பிரசாரப் பயணக் கூட்ட விவரம் வருமாறு 17.10.2021 (காலை) வேலூர், 18.10.2021 (மாலை) ராஜபாளையம், 19.10.2021 (மாலை) திண்டுக்கல், 20.10.2021 (மாலை) நாகப்பட்டினம், 21.10.2021 (மாலை) செந்துறை என இப்பிரசாரப் பயணக் கூட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X