search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 1,259 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,438 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
    தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 1,259 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,438 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 20 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 1,37,423 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் இன்று 163 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 26,83,396 ஆக உள்ளது. 26,32,092 பேர் குணமடைந்துள்ளன நிலையில், 35,853 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தற்போது 15,451 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    Next Story
    ×