search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடை
    X
    கடை

    தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் புதிய தளர்வுகள் என்னென்ன?

    தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல், மழலையர் பள்ளி, நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள், தனியார் பொருட்காட்சிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய தளர்வுகள் வருமாறு:-

    *  தனியார் நிறுவனங்கள் நடத்தும்  பொருட்காட்சிகளுக்கு அனுமதி

    * நாளை முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்

    மெரினா கடற்கரை

    * இன்று முதல் அனைத்து விதமான கடைகள், உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்படலாம்

    * டியூசன் சென்டர், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் இன்று முதல் செயல்படலாம்

    * நவம்பர் 1ம் தேதி முதல் திருமண விழாக்களில் 100 பேர் வரை பங்கேற்கலாம்

    * இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேர் பங்கேற்கலாம்

    * நவம்பர் முதல், மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்களுக்கு அனுமதி

    * நவம்பர் 1 முதல், ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடற்கரைகளுக்கு செல்லலாம்

    *  நவம்பர் 1 முதல், மழலையர் பள்ளி, நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள் இயங்க அனுமதி.
    Next Story
    ×