search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    போலி பீடி தயாரித்து விற்பனை செய்தவர் கைது

    போலி பீடி தயாரித்து விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரையில் பிரபல பீடி நிறுவனத்தின் பெயரில் போலி பீடிகள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் செல்லூர் போலீசார் அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலி பீடிகள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் செல்லூர் தத்தனேரி அருள்தாஸ்புரத்தை சேர்ந்த முத்துசெல்வம் (வயது 48) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பீடி தயாரித்து விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×