என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முடிந்துபோன விசாரணையை மீண்டும் தொடங்க முடியாது -ஐகோர்ட்டில் எஸ்.பி.வேலுமணி பதில் மனு
Byமாலை மலர்13 Oct 2021 10:38 AM GMT (Updated: 13 Oct 2021 12:33 PM GMT)
டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை தனக்கு வழங்கவேண்டும் என எஸ்.பி.வேலுமணி கூறி உள்ளார்.
சென்னை:
அதிமுக ஆட்சியின்போது சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், ஐபிஎஸ் அதிகாரி பொன்னி தலைமையில் குழு அமைத்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அந்த குழு அளித்த அறிக்கையில், வழக்குப்பதிவு செய்வதற்கு இந்த புகாரில் எந்த ஆரம்பகட்ட முகாந்திரமும் இல்லை என கூறப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் வழக்கை கைவிட அரசு முடிவு செய்திருந்தது.
அதன்பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, எஸ்பி வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த நிலையில், டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், முகாந்திரம் இல்லை என சொல்லி அரசால் கைவிட முடிவு எடுக்கப்பட்ட வழக்கில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருப்பதால், அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கு செல்லாது என கூறி உள்ளார்.
உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை எனக்கு வழங்கவேண்டும். அறிக்கையை இந்த வழக்கில் இணைக்க வேண்டும்.
மாநகராட்சி டெண்டர் முழுக்க முழுக்க வெளிப்படைத் தன்மையோடு ஒளிவுமறைவற்ற முறையில் வழங்கப்பட்டது. விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட இந்த டெண்டர் ஒதுக்கீட்டுக்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. மாறியுள்ள அரசியல் சூழ்நிலையை சாதகமாக்கி, முடிந்துபோன விசாரணையை மீண்டும் தொடங்க முடியாது
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் வரும் 20ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... தி.மு.க. ஆட்சி சாதனைக்கு கிடைத்த வெற்றி என்று கூற முடியாது- கே.பி.முனுசாமி கருத்து
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X