search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    மாநகராட்சி அதிகாரிகள் என கூறி மூதாட்டியிடம் 5½ பவுன் நகை திருட்டு

    கோவையில் மாநகராட்சி அதிகாரிகள் என கூறி மூதாட்டியிடம் 5½ பவுன் நகை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குனியமுத்தூர்:

    கோவை குனியமுத்தூர் செல்வம் நகரை சேர்ந்தவர் சந்தானம். இவரது மனைவி உமா மகேஸ்வரி(65). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தபோது 35 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் டிப்-டாப்பாக உடையணிந்து வந்தனர். தங்களை மாநகராட்சி அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்ட அவர்கள் நீங்கள் உங்களது வீட்டை உங்களது இடத்தில் தான் கட்டி உள்ளீர்களா? எனவும் அளவீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    இதனை அடுத்து உமா மகேஸ்வரியிடம் ஒரு வாலிபர் நைசாக பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மற்றொரு வாலிபர் உள்ளே சென்று பீரோவைத் திறந்து அதில் இருந்த தங்க வளையல், வைர கம்மல் உட்பட 5½ பவுன் நகைகளை திருடினார். பின்னர் 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இதற்கிடையே நகைகள் மாயமானது குறித்து உமா மகேஸ்வரி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×