என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநகராட்சி அதிகாரிகள் என கூறி மூதாட்டியிடம் 5½ பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்13 Oct 2021 10:31 AM GMT (Updated: 13 Oct 2021 10:31 AM GMT)
கோவையில் மாநகராட்சி அதிகாரிகள் என கூறி மூதாட்டியிடம் 5½ பவுன் நகை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குனியமுத்தூர்:
கோவை குனியமுத்தூர் செல்வம் நகரை சேர்ந்தவர் சந்தானம். இவரது மனைவி உமா மகேஸ்வரி(65). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தபோது 35 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் டிப்-டாப்பாக உடையணிந்து வந்தனர். தங்களை மாநகராட்சி அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்ட அவர்கள் நீங்கள் உங்களது வீட்டை உங்களது இடத்தில் தான் கட்டி உள்ளீர்களா? எனவும் அளவீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதனை அடுத்து உமா மகேஸ்வரியிடம் ஒரு வாலிபர் நைசாக பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மற்றொரு வாலிபர் உள்ளே சென்று பீரோவைத் திறந்து அதில் இருந்த தங்க வளையல், வைர கம்மல் உட்பட 5½ பவுன் நகைகளை திருடினார். பின்னர் 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
இதற்கிடையே நகைகள் மாயமானது குறித்து உமா மகேஸ்வரி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கோவை குனியமுத்தூர் செல்வம் நகரை சேர்ந்தவர் சந்தானம். இவரது மனைவி உமா மகேஸ்வரி(65). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தபோது 35 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் டிப்-டாப்பாக உடையணிந்து வந்தனர். தங்களை மாநகராட்சி அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்ட அவர்கள் நீங்கள் உங்களது வீட்டை உங்களது இடத்தில் தான் கட்டி உள்ளீர்களா? எனவும் அளவீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதனை அடுத்து உமா மகேஸ்வரியிடம் ஒரு வாலிபர் நைசாக பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மற்றொரு வாலிபர் உள்ளே சென்று பீரோவைத் திறந்து அதில் இருந்த தங்க வளையல், வைர கம்மல் உட்பட 5½ பவுன் நகைகளை திருடினார். பின்னர் 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
இதற்கிடையே நகைகள் மாயமானது குறித்து உமா மகேஸ்வரி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X