என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்ணை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை - மர்மநபர்கள் கைவரிசை
Byமாலை மலர்13 Oct 2021 10:27 AM GMT (Updated: 13 Oct 2021 10:27 AM GMT)
கோவில்பட்டி அருகே பெண்ணை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள ஆவுடையம்மாள்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி பார்வதிஅம்மாள் (வயது 55). இவருடன் அவரது மகன் மற்றும் மருமகள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக பார்வதி அம்மாள் வீட்டிற்கு வெளியே வந்தார். அப்போது அங்கு கரடி வேடமணிந்து நின்ற 2 பேர் திடீரென்று அவரை கயிறு மூலம் கட்டிவிட்டு வீட்டிற்குள் சென்றனர். பின்னர் பீரோவை திறந்து அதிலிருந்த 5 பவுன் நகைளை எடுத்து கொண்டு சென்றுவிட்டனர்.
அப்போது அங்கு வந்தவர்கள் பார்வதியம்மாளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X