search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    180 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல்- வியாபாரி கைது

    நிலக்கோட்டை அருகே உள்ள குல்லிசெட்டிபட்டியில் மளிகை கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 180 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரியின் தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மேற்பார்வையில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேக்தாவூத், மாரிமுத்து மற்றும் போலீசார் நிலக்கோட்டை பகுதியில் சோதனை நடத்தினர். அதில் நிலக்கோட்டை அருகே உள்ள குல்லிசெட்டிபட்டியில் மளிகை கடையில் 180 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர் சுரேஷ் (வயது 28) என்பவரை கைது செய்தார்.
    Next Story
    ×