search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு - இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என கலெக்டர் அறிவிப்பு

    விண்ணப்பங்களை மாவட்ட நிர்வாகம் மூலமாக கள ஆய்வு செய்து தகுதியான பயனாளிகளுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்ய இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று மாவட்ட  கலெக்டர் எஸ்.வினீத் அறிவுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்காக பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    இந்த விண்ணப்பங்களை மாவட்ட நிர்வாகம் மூலமாக கள ஆய்வு செய்து தகுதியான பயனாளிகளுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது. எனவே நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் குடியிருப்புகள் வாங்கித் தருவதாக வெளி நபர்களோ, இடைத்தரகர்களோ கூறினால் அதனை நம்பி பொதுமக்கள் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

    மேலும் இதுபோன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களின் மீது காவல் துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×