search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரத்தில் இருந்து விழுந்த பாம்பு குட்டிகளை படத்தில் காணலாம்.
    X
    மரத்தில் இருந்து விழுந்த பாம்பு குட்டிகளை படத்தில் காணலாம்.

    மரத்தில் இருந்து விழுந்த பாம்பு குட்டிகள் - பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு

    தாலுகா அலுவலக காவலாளி சம்பத் பாம்பு குட்டிகள் குறித்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.
    பல்லடம்:

    பல்லடம் - பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ளது தாலுகா அலுவலகம். நேற்று வழக்கம் போல மனு கொடுக்க வந்தவர்கள், பல்வேறு வேலைகளுக்காக வந்தவர்கள் என தாலுகா அலுவலகம் பரபரப்பாக இயங்கி வந்தது. இந்த நிலையில் வெயில் காரணமாக அங்கு உள்ள வேப்ப மரத்தின் நிழலில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். 

    அப்போது அவர் மேல் சருகு போல் ஏதோ விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சருகை தட்டிவிட முயன்றபோது, அது பச்சை பாம்பு குட்டி என்பது தெரியவந்தது. இதனால் அவர் அந்த இடத்தை விட்டு நகர முயன்றபோது இன்னொரு பாம்பு குட்டி விழுந்தது. 

    இதையடுத்து தாலுகா அலுவலக காவலாளி சம்பத் பாம்பு குட்டிகள் குறித்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். 

    சம்பவ இடம் வந்த, தீயணைப்புத் துறையினர் மரத்திலிருந்து விழும் நிலையில் இருந்த சுமார் 10க்கும் மேற்பட்ட பச்சை பாம்பு குட்டிகளை பத்திரமாக மீட்டு, காட்டுப் பகுதியில் கொண்டு போய் விட்டனர். பாம்பு குட்டி போட்ட சம்பவத்தால் தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×