என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மரத்தில் இருந்து விழுந்த பாம்பு குட்டிகள் - பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு
Byமாலை மலர்13 Oct 2021 9:47 AM GMT (Updated: 13 Oct 2021 9:47 AM GMT)
தாலுகா அலுவலக காவலாளி சம்பத் பாம்பு குட்டிகள் குறித்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.
பல்லடம்:
பல்லடம் - பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ளது தாலுகா அலுவலகம். நேற்று வழக்கம் போல மனு கொடுக்க வந்தவர்கள், பல்வேறு வேலைகளுக்காக வந்தவர்கள் என தாலுகா அலுவலகம் பரபரப்பாக இயங்கி வந்தது. இந்த நிலையில் வெயில் காரணமாக அங்கு உள்ள வேப்ப மரத்தின் நிழலில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் மேல் சருகு போல் ஏதோ விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சருகை தட்டிவிட முயன்றபோது, அது பச்சை பாம்பு குட்டி என்பது தெரியவந்தது. இதனால் அவர் அந்த இடத்தை விட்டு நகர முயன்றபோது இன்னொரு பாம்பு குட்டி விழுந்தது.
இதையடுத்து தாலுகா அலுவலக காவலாளி சம்பத் பாம்பு குட்டிகள் குறித்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடம் வந்த, தீயணைப்புத் துறையினர் மரத்திலிருந்து விழும் நிலையில் இருந்த சுமார் 10க்கும் மேற்பட்ட பச்சை பாம்பு குட்டிகளை பத்திரமாக மீட்டு, காட்டுப் பகுதியில் கொண்டு போய் விட்டனர். பாம்பு குட்டி போட்ட சம்பவத்தால் தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X