search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வெள்ளகோவிலில் ரூ.69 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

    நேற்று 150 விவசாயிகள் 78 ஆயிரத்து 659 கிலோ தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை அன்று தேங்காய் பருப்பும், வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெறும், இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் சூரியகாந்தி விதை மற்றும் தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். 

    நேற்று 150 விவசாயிகள் 78 ஆயிரத்து 659 கிலோ தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், மூலனூர், ஈரோடு, காங்கேயம், வெள்ளகோவில் பகுதிகளை சேர்ந்த 12 வியாபாரிகள் கலந்து கொண்டு அதிகபட்சமாக ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூ.104 க்கும், குறைந்தபட்சமாக ரூ.73 க்கும், கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ. 69 லட்சத்து 36 ஆயிரத்து 433க்கு வணிகம் நடைபெற்றது.
    Next Story
    ×