என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மது என நினைத்து பூச்சி மருந்தை குடித்த விவசாயி மரணம்
Byமாலை மலர்13 Oct 2021 9:23 AM GMT (Updated: 13 Oct 2021 9:23 AM GMT)
மது பாட்டிலையும் அதற்கு அருகில் செடிகளுக்கு அடிக்க மது பாட்டிலில் வைத்திருந்த பூச்சி மருந்தையும் தனது வீட்டில் உள்ள பாத்ரூமில் ஒரே இடத்தில் குப்புசாமி வைத்திருந்தார்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள மாந்தபுரம் சூடக்கல் மேடு பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 56), குடிப்பழக்கம் உள்ளவர். இவர் மது பாட்டிலையும் அதற்கு அருகில் செடிகளுக்கு அடிக்க மது பாட்டிலில் வைத்திருந்த பூச்சி மருந்தையும் தனது வீட்டில் உள்ள பாத்ரூமில் ஒரே இடத்தில் வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு மது பாட்டிலை எடுத்து குடிப்பதற்கு பதிலாக பாட்டிலில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார். இதனால் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனே காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குப்புசாமி இறந்தார். இந்த சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X