search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மது என நினைத்து பூச்சி மருந்தை குடித்த விவசாயி மரணம்

    மது பாட்டிலையும் அதற்கு அருகில் செடிகளுக்கு அடிக்க மது பாட்டிலில் வைத்திருந்த பூச்சி மருந்தையும் தனது வீட்டில் உள்ள பாத்ரூமில் ஒரே இடத்தில் குப்புசாமி வைத்திருந்தார்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள மாந்தபுரம் சூடக்கல் மேடு பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 56), குடிப்பழக்கம் உள்ளவர். இவர் மது பாட்டிலையும் அதற்கு அருகில் செடிகளுக்கு அடிக்க மது பாட்டிலில் வைத்திருந்த பூச்சி மருந்தையும் தனது வீட்டில் உள்ள பாத்ரூமில் ஒரே இடத்தில் வைத்திருந்தார்.

    நேற்று முன்தினம் இரவு மது பாட்டிலை எடுத்து குடிப்பதற்கு பதிலாக பாட்டிலில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார். இதனால் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார்.
     
    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனே காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குப்புசாமி இறந்தார். இந்த சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×