என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏ.டி.எம். மையங்களுக்கு வரும் முதியவர்களிடம் நூதன பண மோசடி - வடமாநில வாலிபர் கைது
Byமாலை மலர்13 Oct 2021 8:16 AM GMT (Updated: 13 Oct 2021 8:16 AM GMT)
முதியவர்களுக்கு பணம் எடுத்து உதவுவது போல் ரகசிய எண்ணை கேட்டு தெரிந்து கொண்டு கார்டுகளை மாற்றி கொடுத்து, பணத்தை திருடுவதை பஸ்வான் வழக்கமாக வைத்திருந்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், மூலனூர், அலங்கியம் உள்ளிட்ட பகுதிகளில் ஏ.டி.எம்., மையங்களுக்கு பணம் எடுக்க செல்லும் முதியவர், கிராம மக்களை நோட்டமிட்டு சிலர், பணம் எடுத்து தருவது போல் ஏ.டி.எம்., கார்டை மாற்றியும், ஏமாற்றியும் பணத்தை திருடி செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. இதுபோன்ற தொடர் திருட்டு தொடர்பாக, தாராபுரம் போலீசில் பலர் புகார் செய்தனர்.
இதையடுத்து ஏ.டி.எம்., மையங்களில் கிடைத்த ‘சி.சி.டி.வி.’ கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரித்து வந்தனர். இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சோட்டே லால் பஸ்வான் (வயது34) என்பவர் முதியவர்களிடம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
முதியவர்களுக்கு பணம் எடுத்து உதவுவது போல் ரகசிய எண்ணை கேட்டு தெரிந்து கொண்டு கார்டுகளை மாற்றி கொடுத்து, பணத்தை திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X