search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பவானிசாகர் கால்வாய் தண்ணீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை - அதிகாரிகள் எச்சரிக்கை

    கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு கடந்த மாதம் 12ந் தேதி முதல் பவானிசாகர் அணையில் இருந்து நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு கால்வாய்கள் மூலம் தொடர் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
    திருப்பூர்:

    நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்காக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன கால்வாய்கள் வழியாக கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் திருப்பூர் மாவட்ட எல்லையான காங்கேயம் தாலுகா மரவபாளையம், பரஞ்சேர்வழி, நத்தக்காடையூர், பழையகோட்டை, வள்ளியரச்சல், மேட்டுப்பாளையம் ஊராட்சி பகுதிகள் வழியாக கடைமடை பகுதியான வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மங்களப்பட்டி பகுதி மற்றும் கரூர் மாவட்டம் அஞ்சூர் ஊராட்சி கிராம பகுதிகளுக்கு தற்போது சென்று சேர்ந்து உள்ளது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்ட நீர்வளத்துறை மேம்பாட்டு அதிகாரிகள் மற்றும் காங்கேயம் கோட்ட பொதுப்பணித்துறை கீழ்பவானி பாசன கண்காணிப்பு குழு அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு கடந்த மாதம் 12ந் தேதி முதல் பவானிசாகர் அணையில் இருந்து நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு கால்வாய்கள் மூலம் தொடர் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரை முறையாக நஞ்சை சம்பா நெல் சாகுபடி பாசன விவசாயிகள் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதன்படி கீழ்பவானி பாசன கால்வாய்களில் தற்போது செல்லும் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கான தண்ணீரை மின் மோட்டார் வைத்து உறிஞ்சுவது கண்டறியப்பட்டாலும், டிராக்டர்கள் மூலம் தண்ணீரை கொண்டு சென்று வேறு பாசனத்திற்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் உரிய நெல் பயிர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ள இந்த தண்ணீரை வேறு பாசன பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டாலும் சம்பந்தப்பட்டவர்கள் தகவல்கள் குறித்து பொதுப்பணித்துறை மூலம் திருப்பூர், ஈரோடு மாவட்ட கலெக்டர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய சட்டபூர்வமான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

    எனவே இப்பகுதி விவசாயிகள் கீழ்பவானி பாசன கால்வாயில் செல்லும் தண்ணீரை பயன்படுத்தி நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்து இந்த ஆண்டு கூடுதல் மகசூல் பெற்று பயன் பெற முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×