என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
Byமாலை மலர்13 Oct 2021 4:48 AM GMT (Updated: 13 Oct 2021 4:48 AM GMT)
ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. குண்டுமல்லி, முல்லை கிலோ ரூ.1,100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நொய்யல்:
கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, பேச்சிப்பாறை, நடையனூர், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் குண்டுமல்லி, முல்லை, செவ்வந்தி, உள்ளிட்ட பல்வேறு பூக்களை பயிரிட்டுள்ளனர்.
இந்தநிலையில் நாளை (வியாழக்கிழமை) ஆயுதபூஜை என்பதால் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு பூக்களை அதிக விலைக்கு வாங்கி சென்றனர். இதனால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு குண்டுமல்லிகை ஒரு கிலோ ரூ.400-க்கும், முல்லை ரூ.400-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும், அரளி ரூ.170-க்கும், சம்பங்கி ரூ.160-க்கும், ரோஜா ரூ.140-க்கும், கோழிக்கொண்டை ரூ.30-க்கும், மருவு ஒரு கட்டு ரூ.15-க்கும், ஆடாதொடை இலை ஒரு கட்டு ரூ.5-க்கும், துளசி ஒரு கட்டு ரூ.5-க்கும் விற்பனையானது.
நேற்று குண்டுமல்லி கிலோ ரூ.1,100-க்கும், முல்லை ரூ.1,100-க்கும், செவ்வந்தி ரூ.270-க்கும், அரளி ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.320-க்கும், ரோஜா ரூ.320-க்கும், கோழிக்கொண்டை ரூ.90-க்கும், மருவு ஒரு கட்டு ரூ.50-க்கும், ஆடாதொடை இலை ஒரு கட்டு ரூ.15-க்கும், துளசி ஒரு கட்டு ரூ.15-க்கும் விற்பனையானது.
ஆயுத பூஜையையொட்டி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, பேச்சிப்பாறை, நடையனூர், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் குண்டுமல்லி, முல்லை, செவ்வந்தி, உள்ளிட்ட பல்வேறு பூக்களை பயிரிட்டுள்ளனர்.
இந்தநிலையில் நாளை (வியாழக்கிழமை) ஆயுதபூஜை என்பதால் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு பூக்களை அதிக விலைக்கு வாங்கி சென்றனர். இதனால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு குண்டுமல்லிகை ஒரு கிலோ ரூ.400-க்கும், முல்லை ரூ.400-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும், அரளி ரூ.170-க்கும், சம்பங்கி ரூ.160-க்கும், ரோஜா ரூ.140-க்கும், கோழிக்கொண்டை ரூ.30-க்கும், மருவு ஒரு கட்டு ரூ.15-க்கும், ஆடாதொடை இலை ஒரு கட்டு ரூ.5-க்கும், துளசி ஒரு கட்டு ரூ.5-க்கும் விற்பனையானது.
நேற்று குண்டுமல்லி கிலோ ரூ.1,100-க்கும், முல்லை ரூ.1,100-க்கும், செவ்வந்தி ரூ.270-க்கும், அரளி ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.320-க்கும், ரோஜா ரூ.320-க்கும், கோழிக்கொண்டை ரூ.90-க்கும், மருவு ஒரு கட்டு ரூ.50-க்கும், ஆடாதொடை இலை ஒரு கட்டு ரூ.15-க்கும், துளசி ஒரு கட்டு ரூ.15-க்கும் விற்பனையானது.
ஆயுத பூஜையையொட்டி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X