search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    நாட்டறம்பள்ளி அருகே வாகனம் மோதி காயமடைந்த தொழிலாளி பலி

    நாட்டறம்பள்ளி அருகே வாகனம் மோதி காயமடைந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த ராசன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் கண்ணு பையன். இவரது மகன் சாமுடி (வயது 32). கூலி தொழிலாளி. இவர் கடந்த 6-ந் தேதி நாட்டறம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் மேல் மல்லப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் சாமுடி படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்த பொது மக்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்தநிலையில் நேற்று காலை சாமுடி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மல்லப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் தீர்த்தகிரி கொடுத்த புகாரின் பேரில், நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய நபரை தேடி வருகின்றார்.
    Next Story
    ×