என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகர்கோவிலில் காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயம்
Byமாலை மலர்12 Oct 2021 10:40 AM GMT (Updated: 12 Oct 2021 10:40 AM GMT)
நாகர்கோவிலில் காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மறவன் குடியிருப்பு மிக்கேல் தெருவைச் சேர்ந்தவர் மஞ்சு (வயது 19).
இவர், பிரவின் என்பவரை காதலித்து கடந்த 1¼ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. சம்பவத்தன்றும் பிரச்சனை ஏற்பட்டதால் மஞ்சு வீட்டை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து பிரவின் மனைவி மஞ்சுவை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் மஞ்சுவை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் மஞ்சுவின் தாயார் செல்வராணி கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகர் ராயப்பன் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது மகள் சைஜி (23). இவர், ராமன்புதூரில் உள்ள மெடிக்கல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சைஜி, வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது பெற்றோர் உறவினர் வீடுகள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடினர். அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவரது தாயார் ஹெப்சிபாய் வடசேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில் மறவன் குடியிருப்பு மிக்கேல் தெருவைச் சேர்ந்தவர் மஞ்சு (வயது 19).
இவர், பிரவின் என்பவரை காதலித்து கடந்த 1¼ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. சம்பவத்தன்றும் பிரச்சனை ஏற்பட்டதால் மஞ்சு வீட்டை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து பிரவின் மனைவி மஞ்சுவை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் மஞ்சுவை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் மஞ்சுவின் தாயார் செல்வராணி கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகர் ராயப்பன் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது மகள் சைஜி (23). இவர், ராமன்புதூரில் உள்ள மெடிக்கல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சைஜி, வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது பெற்றோர் உறவினர் வீடுகள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடினர். அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவரது தாயார் ஹெப்சிபாய் வடசேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X