என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ரூ.1.15 கோடி மதிப்பில் புதிய தீயணைப்பு அலுவலகம்
Byமாலை மலர்12 Oct 2021 10:09 AM GMT (Updated: 12 Oct 2021 10:09 AM GMT)
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.1.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.
மதுரை:
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரம் பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீர வசந்த ராயர் மண்டபம் முற்றிலுமாக சேதம் அடைந்தது.
இதனைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி மேலச்சித்திரை வீதியில் உள்ள கார் நிறுத்துமிடம் பகுதியில் தற்காலிக தீயணைப்பு அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.1.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.
இதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு கிழக்கு சித்திரை வீதி சந்திப்பில் உள்ள வேளாண் மண்பரிசோதனை மைய கட்டிடத்தை ரூ.1.65 லட்சம் செலவில் இடிக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணி ஒரு மாதத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு இங்கு 12 சென்ட் மனையில் முதல் தளத்துடன் கூடிய தீயணைப்பு அலுவலகம் கட்டப்பட உள்ளது.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரம் பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீர வசந்த ராயர் மண்டபம் முற்றிலுமாக சேதம் அடைந்தது.
இதனைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி மேலச்சித்திரை வீதியில் உள்ள கார் நிறுத்துமிடம் பகுதியில் தற்காலிக தீயணைப்பு அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.1.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.
இதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு கிழக்கு சித்திரை வீதி சந்திப்பில் உள்ள வேளாண் மண்பரிசோதனை மைய கட்டிடத்தை ரூ.1.65 லட்சம் செலவில் இடிக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணி ஒரு மாதத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு இங்கு 12 சென்ட் மனையில் முதல் தளத்துடன் கூடிய தீயணைப்பு அலுவலகம் கட்டப்பட உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X