என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
Byமாலை மலர்12 Oct 2021 9:59 AM GMT (Updated: 12 Oct 2021 9:59 AM GMT)
நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் வைகை அணையில் இருந்து இன்று காலை முதல் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
கூடலூர்:
பெரியாறு, வைகை அணையில் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததுடன் நீர் மட்டமும் உயர்ந்து வந்தது. அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் வைகை அணையில் இருந்து 719 கன அடி மட்டுமே திறக்கப்பட்டது.
71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 56.07 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 954 கன அடி தண்ணீர் வருகிறது. இன்று காலை முதல் 1119 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2903 மி.கன அடியாக உள்ளது.
பெரியாறு அணையின் நீர் மட்டம் 128.60 அடி. வரத்து 1312 கன அடி. திறப்பு 1300 கன அடி. இருப்பு 4396 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி. அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் 60 கன அடி நீரும் உபரியாக வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 435.32 மில்லியன் கன அடியாக உள்ளது.
சோத்துப்பாறை நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டி நீர் மட்டம் 126.31 அடியாக உள்ளது. இதனால் அணைக்கு வரும் 7 கன அடி நீரும் முழுமையாக வெளியேற்றப்படுகிறது.
பெரியாறு 22.9, தேக்கடி 17.4, கூடலூர் 6.8, சண்முகாநதி அணை 3.7, உத்தமபாளையம் 5.2, மஞ்சளாறு 21.6, சோத்துப்பாறை 2, கொடைக்கானல் 8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
பெரியாறு, வைகை அணையில் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததுடன் நீர் மட்டமும் உயர்ந்து வந்தது. அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் வைகை அணையில் இருந்து 719 கன அடி மட்டுமே திறக்கப்பட்டது.
71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 56.07 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 954 கன அடி தண்ணீர் வருகிறது. இன்று காலை முதல் 1119 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2903 மி.கன அடியாக உள்ளது.
பெரியாறு அணையின் நீர் மட்டம் 128.60 அடி. வரத்து 1312 கன அடி. திறப்பு 1300 கன அடி. இருப்பு 4396 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி. அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் 60 கன அடி நீரும் உபரியாக வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 435.32 மில்லியன் கன அடியாக உள்ளது.
சோத்துப்பாறை நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டி நீர் மட்டம் 126.31 அடியாக உள்ளது. இதனால் அணைக்கு வரும் 7 கன அடி நீரும் முழுமையாக வெளியேற்றப்படுகிறது.
பெரியாறு 22.9, தேக்கடி 17.4, கூடலூர் 6.8, சண்முகாநதி அணை 3.7, உத்தமபாளையம் 5.2, மஞ்சளாறு 21.6, சோத்துப்பாறை 2, கொடைக்கானல் 8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X