search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    காங்கயம் - சேவூரில் ரூ.43.75 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு, நிலக்கடலை ஏலம்

    தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.99க்கும், குறைந்தபட்சமாக ரூ.83க்கும், சராசரியாக ரூ.99க்கும் ஏலம் போனது.
    காங்கயம்:

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்  நடைபெற்ற ஏலத்தில் ரூ.3.75 லட்சத்துக்கு தேங்காய் பருப்புகள் விற்பனையானது. இந்த வார ஏலத்துக்கு காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 10 விவசாயிகள் 3,798 கிலோ தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். முத்தூர், காங்கயம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 10 வியாபாரிகள் இவற்றை வாங்க வந்திருந்தனர்.

    தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.99க்கும், குறைந்தபட்சமாக ரூ.83க்கும், சராசரியாக ரூ.99க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3.75 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் செய்திருந்தார். 

    சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.40 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது. ஏலத்துக்கு 1,650 நிலக்கடலை மூட்டைகள் வரத்து இருந்தது. 

    இதில் முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ. 6,400 முதல் ரூ.6,750 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ. 6,000 முதல் ரூ. 6,150 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ. 5,800 முதல் ரூ.5,950 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.40 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது. 
    Next Story
    ×