search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    மிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

    சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம்
    இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்து வரும் 4 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழையும், ஈரோடு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

    நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழையும், ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

    மழை


    14, 15-ந்தேதிகளில் நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

    சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    அடுத்த 48 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்ககடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 15-ந்தேதி ஆந்திரா-ஒடிசா கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×