search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வாளவாடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட தேவராஜ்க்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
    உடுமலை:

    உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலைசெய்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சார்பில் உடுமலை அருகே உள்ள பெரிய வாளவாடி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு ரங்கராஜன் தலைமை வகித்தார். உடுமலை ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், மகேஷ், கோபாலகிருஷ்ணன், ம.தி.மு.க. ராமநாதன் முன்னிலை வகித்தனர். 

    ஆர்ப்பாட்டத்தை லோகநாதன் தொடங்கி  வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் முத்துச்சாமி, ஷாகிதா ,பால தண்டபாணி ,கனகராஜ் ஆகியோர் பேசினர். டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட தேவராஜ்க்கு பொன்னாடை போர்த்தப்பட்டது. 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×