என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தக்காளி விலை 4 மடங்கு உயர்வு
Byமாலை மலர்12 Oct 2021 6:11 AM GMT (Updated: 12 Oct 2021 6:11 AM GMT)
புரட்டாசியில் பெய்த தொடர் மழை காரணமாக செடிகளில் தக்காளி அழுகி வருகிறது. இதனால் உற்பத்தி இழப்பு ஏற்பட்டது.
மங்கலம்:
திருப்பூர் மாவட்டத்தில் வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி அறுவடை முடியும் தருவாயில் உள்ளது. ஓராண்டுக்கும் மேலாக தக்காளிக்கு போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் பலத்த நஷ்டத்தை சந்தித்தனர். நஷ்டத்தை தவிர்க்க தக்காளி சாகுபடி செய்யும் பரப்பை விவசாயிகள் குறைத்தனர்.
புரட்டாசியில் பெய்த தொடர் மழை காரணமாக செடிகளில் தக்காளி அழுகி வருகிறது. இதனால் உற்பத்தி இழப்பு ஏற்பட்டது. வெளியூர் வரத்தும் குறைந்து உள்ளது. பல விவசாயிகள் தக்காளி சாகுபடி பரப்பை குறைத்து புரட்டாசி பட்டத்தில் கால்நடை தீவன பயிர்கள் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டினர்.
இதனால் இரு வாரங்கள் முன்பு வரை 14 கிலோ கொண்ட ஒரு டிப்பர் தக்காளி ரூ.120க்கு விற்பனையான நிலையில், கடந்த வாரத்தில் அது ரூ.250ஆக உயர்ந்தது. தற்போது ஒரு டிப்பர் ரூ. 500ஆக உயர்ந்துள்ளது. விலை உயர்ந்த போதிலும் விளைச்சல் சரிந்ததால் தக்காளி விவசாயிகளுக்கு பெரிய அளவில் பயன் அளிக்கவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X