என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீபாவளி பண்டிகை- அரசு விரைவு பஸ்களில் 7 ஆயிரம் பேர் முன்பதிவு
Byமாலை மலர்12 Oct 2021 5:25 AM GMT (Updated: 12 Oct 2021 6:28 AM GMT)
கோயம்பேடு உள்ளிட்ட சில இடங்களில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டாலும் அங்கு நேரில் வந்து டிக்கெட் எடுப்பவர்கள் மிகக்குறைவாகவே உள்ளனர்.
சென்னை:
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதுதவிர வழக்கமாக இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து பயணத்தை திட்டமிட்டு வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகைக்காக நவம்பர் 2-ந் தேதி பயணம் செய்ய 4 ஆயிரம் பேரும், 3-ந் தேதி பயணம் செய்ய 3 ஆயிரம் பேரும் இதுவரையில் முன்பதிவு செய்துள்ளனர். அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத இருக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது.
கடந்த காலங்களை போல கவுண்டர்களில் நேரடியாக டிக்கெட் எடுப்பது குறைந்து வருகிறது. பெரும்பாலும் ஆன்லைன் வழியாகவே முன்பதிவு செய்யப்படுகிறது. கோயம்பேடு உள்ளிட்ட சில இடங்களில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டாலும் அங்கு நேரில் வந்து டிக்கெட் எடுப்பவர்கள் மிகக்குறைவாகவே உள்ளனர்.
ஆனாலும் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்படும்.
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதுதவிர வழக்கமாக இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து பயணத்தை திட்டமிட்டு வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் 832 அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரையில் 7 ஆயிரம் பேர் தீபாவளி பண்டிகைக்காக முன்பதிவு செய்திருப்பதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்காக நவம்பர் 2-ந் தேதி பயணம் செய்ய 4 ஆயிரம் பேரும், 3-ந் தேதி பயணம் செய்ய 3 ஆயிரம் பேரும் இதுவரையில் முன்பதிவு செய்துள்ளனர். அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத இருக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது.
கடந்த காலங்களை போல கவுண்டர்களில் நேரடியாக டிக்கெட் எடுப்பது குறைந்து வருகிறது. பெரும்பாலும் ஆன்லைன் வழியாகவே முன்பதிவு செய்யப்படுகிறது. கோயம்பேடு உள்ளிட்ட சில இடங்களில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டாலும் அங்கு நேரில் வந்து டிக்கெட் எடுப்பவர்கள் மிகக்குறைவாகவே உள்ளனர்.
ஆனாலும் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... மத்திய அரசின் இந்த செயலால் மக்கள் தலையில் ரூ.46 ஆயிரம் கோடி கடன்: சீதாராம் யெச்சூரி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X