search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    திருப்பூரை குளிர்வித்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

    சாலையில் சென்ற பொதுமக்கள் குடைபிடித்தப்படி சென்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. அதன்பிறகு கடந்த 3 நாட்களாக மழை பெய்யவில்லை.

    மேலும் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தது. இந்தநிலையில் இன்று காலை திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மதியம் 3 மணியில் இருந்து லேசான தூரலுடன் மழை பெய்தது.  

    அதன்பிறகு பலத்த மழையாக பெய்தது. சாலையில் சென்ற பொதுமக்கள் குடைபிடித்தப்படி சென்றனர். மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    சிதலமடைந்த சாலைகள் மழையின் காரணமாக சேறும் சகதியுமாக மாறின. 

    இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.  
    Next Story
    ×