search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    தல்லாகுளத்தில் நாளை மின்தடை

    மதுரை ரேஸ்கோர்ஸ் மற்றும் சொக்கிகுளம் மின் பிரிவுக்கு உட்பட்ட அசோக் பீடர், எக்ஸ்பிரஸ் பீடர் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    மதுரை:

    மதுரை ரேஸ்கோர்ஸ் மற்றும் சொக்கிகுளம் மின் பிரிவுக்கு உட்பட்ட அசோக் பீடர், எக்ஸ்பிரஸ் பீடர் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இதன் காரணமாக நாளை (12-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அழகர்கோவில் ரோடு (ஐ.டி.ஐ. பஸ் நிறுத்தம் முதல் தல்லாகுளம் பெருமாள் கோவில் வரை), கண்மாய் மேலத்தெரு, டீன் குடியிருப்பு, காமராஜர் நகர், சரோஜினி தெரு, எச்.ஏ.கான் ரோடு, வெங்கட்ராமன் ரோடு, ஆல் இந்தியா ரேடியோ குடியிருப்பு வளாகம், எல்.டி.சி. ரோடு (வீட்டு வசதி வாரிய குடியிருப்பு), கோகலே ரோட்டின் ஒரு பகுதி, நேதாஜி மெயின் ரோடு, மருதுபாண்டியன் நகர், பீ.பீ.குளம், சிங்கராயர் காலனி, சத்தியமூர்த்தி நகர், பி.டி.ஆர். மெயின் ரோடு, கட்டபொம்மன் தெரு, நரிமேடு மெயின்ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை மதுரை வடக்கு மின் பகிர்மான செயற்பொறியாளர் மலர் விழி தெரிவித்தார்.

    Next Story
    ×