என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சட்டவிரோதமாக லாரிகளில் கால்நடைகள் ஏற்றி செல்வதை தடுக்க வேண்டும் - சிவசேனா வலியுறுத்தல்
Byமாலை மலர்11 Oct 2021 10:17 AM GMT (Updated: 11 Oct 2021 10:17 AM GMT)
மாவட்ட எல்லையில் எஸ்.பி.சி.ஏ. சோதனை சாவடி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்:
சட்டவிரோதமாக வாகனங்களில் கால்நடைகள் ஏற்றி செல்வதை தடுக்க வேண்டும் என சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து சிவசேனா கட்சி இளைஞரணி மாநில தலைவர் திருமுருக தினேஷ் திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கால்நடைகள் துன்புறுத்தப்பட்டு கடத்தி செல்வது குறித்து சிவசேனா கட்சி சார்பில் பலமுறை மாநில கட்டுப்பாட்டு அறைக்கும், மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் கூறி உள்ளோம். ஆனால் மேற்படி புகார்களுக்கு இதுவரையிலும் எந்தவித பலனும் இல்லை.
நாட்டு மாடுகளை காப்பாற்றவும், பிற்கால சந்ததியினருக்கு பால் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்காகவும் விவசாயம் செழிப்பதற்காகவும் உடனடியாக தலையிட்டு திருப்பூர் மாவட்டத்தில் சொசைட்டி பார் தி பிரிவென்சன் ஆப் கர்லி டூ அனிமல்ஸ் கமிட்டி அமைக்க வேண்டும்.
ஆடு, மாடு, கோழி, பன்றி போன்றவைகளை மூடிய நிலையில் கண்டெய்னர் லாரிகளிலும், திறந்தவெளி கனரக லாரிகளிலும் அடைத்து சித்ரவதை செய்து திருப்பூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் வழியாக கொண்டு செல்கின்றனர்.
இதனை தடுக்க மாவட்ட எல்லையில் எஸ்.பி.சி.ஏ. சோதனை சாவடி அமைக்க வேண்டும். சட்ட விதிமுறைகளை மீறுவோர் மீது கால்நடைத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை , போக்குவரத்து துறைகளின் மூலம் நடவடிக்கை எடுத்து எஸ்.பி.சி.ஏ., மூலம் விலங்குகள் பாதுகாப்பகம் அமைத்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X