search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருது பெற்றவர்களை படத்தில் காணலாம்.
    X
    விருது பெற்றவர்களை படத்தில் காணலாம்.

    நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு

    நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் சின்னராசு, கண்ணபிரான், வசந்தி, விஜயலட்சுமி ஆகியோரை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.
    உடுமலை:

    உடுமலை ஜாமியா பள்ளிவாசலில் கிளை தலைவர் ஷான் பாஷா தலைமையில் உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. செயலாளர் அப்துல் நசீர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மக்கள் சேவை பொறுப்பாளர் அப்துல், நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    திருப்பூர் மாவட்ட சமய நல்லிணக்க பேரவை பொறுப்பாளர் அன்வர்தீன் மக்கள் சேவையும் மனிதநேயமும் என்ற தலைப்பில் பேசினார். உடுமலை பகுதியில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் சின்னராசு, கண்ணபிரான், வசந்தி, விஜயலட்சுமி ஆகியோரை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. 

    மேலும் கொரோனா காலத்தில் சிறப்பாக சேவையாற்றிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக உறுப்பினர்களுக்கு உடுமலை காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகிருஷ்ணன் சமூக சேவகர் விருதை வழங்கினார். கணேசன், ஜீவா, ஜோசப் மற்றும் பவித்ரா ஆகியோருக்கு சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது. 

    மேலும் 55 ஏழை மாணவ, மாணவ மாணவிகளுக்கு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் ஸ்கூல் பேக், நோட்டு, பேனா, பென்சில் பாக்ஸ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஜாமியா பள்ளிவாசல் தலைவர் அப்துல் கபூர், பூர்விக பள்ளிவாசல் தலைவர் இஸ்மாயில், செயலாளர் தாஹிர் பாஷா உட்பட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×