என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூலாங்கிணறு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
Byமாலை மலர்11 Oct 2021 9:50 AM GMT (Updated: 11 Oct 2021 9:50 AM GMT)
பூலாங்கிணறு ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா இளங்கோவன், முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளிக்கு மின்சார தானியங்கி மணியை வழங்கினார்.
உடுமலை:
உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம், சர்வதேச விண்வெளி வார விழா மற்றும் தூய்மை பாரத இயக்கம் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெற்றன.
பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சரவணன் வரவேற்று பேசினார். பூலாங்கிணறு ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா இளங்கோவன், முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளிக்கு மின்சார தானியங்கி மணியை வழங்கினார்.
பள்ளியின் முன்னாள் மாணவர் கண்ணப்பன் எதிர்கால கல்வி வாய்ப்புகள் எனும் தலைப்பில் தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினார். முதுகலை இயற்பியல் ஆசிரியர் ரத்தினசாமி விண்வெளி அற்புதங்கள் பற்றி சிறப்புரையாற்றினார்.
தூய்மை மற்றும் கொரோனா விழிப்புணர்வு பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. முடிவில் தொழிற்கல்வி ஆசிரியர் செந்தில் குமார் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X