என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவினாசியில் கடையை உடைத்து கொள்ளை
Byமாலை மலர்11 Oct 2021 9:38 AM GMT (Updated: 11 Oct 2021 9:38 AM GMT)
கடையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள், பீடி பண்டல்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூ .1000 ஆகியவற்றை காணவில்லை.
அவினாசி:
அவினாசியை அடுத்து கருவலூர் மெயின் ரோட்டில் பெட்டி கடை நடத்தி வருபவர் தங்கவேல் ( வயது 45). இவர் நேற்று முன்தினம் இரவு தனது கடையை பூட்டிவிட்டு சென்றார்.
பின்னர் காலையில் கடைக்கு சென்று பார்த்த போது கடையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள், பீடி பண்டல்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூ .1000 ஆகியவற்றை காணவில்லை. எனவே இரவு கடையை பூட்டி விட்டு சென்றதும் மர்ம நபர்கள் கடையை உடைத்து பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அவினாசி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X