search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிறப்பான செயல்பாடு - ஓடக்கல்பாளையம் அரசு பள்ளிக்கு விருது

    பள்ளியின் செயல்பாடுகள், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் சிறந்த பள்ளி தேர்வு செய்யப்படுகிறது.
    திருப்பூர்:

    தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த பள்ளிகளுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. 2020-21ம் ஆண்டுக்கான சிறந்த பள்ளியாக சுல்தான்பேட்டை ஒன்றியம்  ஓடக்கல்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

    இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதாவிடம், தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் விருதினை பெற்றார்.

    இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர் பிரான்சிஸ் சார்லஸ் கூறுகையில்:

    கற்றல் கற்பித்தல், விளையாட்டு போட்டிகள், திறனாய்வு, பள்ளியின் செயல்பாடுகள், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் சிறந்த பள்ளி தேர்வு செய்யப்படுகிறது. அவ்வகையில் ஓடக்கல்பாளையம் பள்ளி சிறந்த பள்ளி விருது பெற்றுள்ளது என்றார்.
    Next Story
    ×