என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சூலூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
சூலூர்:
கோவை மாவட்டம் சூலூர் தென்னம்பாளையம் அருகே உள்ள விசாகா நகரை சேர்ந்தவர் முருகேசன்(வயது53). அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனிதா(32). இவர் தென்னம்பாளையத்தில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் முருகேசனுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு மாதமாக வீட்டிலேயே ஒய்வு எடுத்து வந்தார். அவரது மனைவி வழக்கம் போல் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் இவரது வீட்டிற்கு மனைவியுடன் வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளதாகவும், இதனால் முருகேசன் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த முருகேசன் கடிதம் எழுதி தனது தம்பிக்கு அனுப்பியுள்ளார். அதனை படித்து பார்த்ததும் அவர் வீட்டிற்கு ஓடி வந்துள்ளார். அப்போது வீட்டில் முருகேசன் தூக்கில் தொங்கியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் சிசிக்சை பலனின்றி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றினர்.
அதில் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும், அதனால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதப்பட்டிருந்து. இதுகுறித்து சூலூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்