என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 5வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்10 Oct 2021 11:13 AM GMT (Updated: 10 Oct 2021 12:10 PM GMT)
தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 19 லட்சத்து 74 ஆயிரத்து 916 'டோஸ்' கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களில் 15 லட்சத்து 55 ஆயிரத்து 943 பேர், முதல் 'டோஸ்' தடுப்பூசியும், நான்கு லட்சத்து 18 ஆயிரத்து 973 பேர் இரண்டாவது, 'டோஸ்' தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
கடந்த 4 ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்த முகாம் வாயிலாக 3 லட்சத்து 72 ஆயிரத்து 546 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கடந்த சில மாதங்களாக தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வந்தது. மக்களின் சிரமத்தை போக்க ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு முகாம் நடத்தி வீட்டின் அருகே தடுப்பூசி போட வழிவகை செய்யப்பட்டது.
அதன்படி இன்று 5 - வது கட்டமாக சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 640 பேருக்கு தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் பள்ளிகள், அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
முன்னதாக கொரோனா தடுப்பூசி போடாமல் விடுபட்டவர்களும், முதல் 'டோஸ்' தடுப்பூசி செலுத்தி காத்திருப்போரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தடுப்பு குழுவினர் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களை முகாமுக்கு அழைத்து சென்று தடுப்பூசி போட வைத்தனர். 100 சதவீத இலக்கை அடையும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதேப்போல் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், வெள்ளகோவில், காங்கயம், உடுமலை, பல்லடம் உள்பட பல்வேறு இடங்களில் இன்று தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X