search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரி
    X
    பூண்டி ஏரி

    பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி உபரி நீர் திறப்பு

    பருவ மழையினால் நீர்வரத்து தொடர்ச்சியாக அதிகரித்து உள்ளதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
    சென்னை:

    சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.  ஏரியின் மொத்த நீர்மட்டம் 35 அடி. இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 33.95 அடியாகவும் தண்ணீர் கொள்ளளவு 2807 மிலிலியன் கன அடியாகவும் இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 1691 கனஅடியாக இருந்தது. 

    தற்போது பருவ மழையினால் நீர்வரத்து தொடர்ச்சியாக அதிகரித்து உள்ளதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. விரைவில் முழு கொள்ளளைவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இன்று பிற்பகல் உபரி நீர் திறந்துவிடப்பட்டது. முதல் கட்டமாக விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் கொசஸ்தலையாற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.  
    Next Story
    ×