என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓட்டலில் மது விற்றவர் உள்பட 3 பேர் கைது
Byமாலை மலர்10 Oct 2021 8:51 AM GMT (Updated: 10 Oct 2021 8:51 AM GMT)
ஓட்டலில் மது விற்றவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்:
தளவாபாளையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சட்டவிரோதமாக மது விற்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் அந்த ஓட்டலுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது தளவாபாளையம் பஜனை மடத்தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 41) என்பவர் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
குளித்தலை கோட்டமேடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற சிவானந்தம் (53) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல குளித்தலை சுங்ககேட் அருகே மது விற்ற வடிவேல் (36) என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 8 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X