என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலாடி அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
Byமாலை மலர்9 Oct 2021 3:56 PM GMT (Updated: 9 Oct 2021 4:15 PM GMT)
கடலாடி அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாயல்குடி:
கடலாடி அருகே மீனங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல். அவருடைய மகன் முகேஷ் (வயது 7).
இவன் கடலாடியில் உள்ள தன்னுடைய மாமா மலைச்சாமி வீட்டுக்கு வந்திருந்தான். அங்கு மலைச்சாமி வீடு கட்டி வருகிறார். கட்டுமானத்திற்காக தொட்டியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீரை எடுத்துள்ளனர்.
சிறுவன் முகேஷ் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். எதிர்பாராதவிதமாக மின்சார மோட்டாரில் தொட்டதாக தெரிகிறது. அப்போது, சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
இந்த சோக சம்பவம் பற்றிய தகவல் அறிந்த கடலாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
பிரேத பரிசோதனைக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு முகேஷ் உடலை அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X