search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    தேவாரத்தில் பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்

    தேவாரம் அருகே ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு மர்மநபர்கள் உள்ளே சென்று பீரோவை உடைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேவாரம் மல்லிங்காபுரத்தை சேர்ந்தவர் வரதராஜ்(80). இவர் தனது வீட்டைபூட்டிவிட்டு திருப்பூரில் உள்ள மகன்களை பார்க்க சென்றுவிட்டார். அருகில் வசிக்கும் சடைச்சி என்பவரிடம் வீட்டை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றார். மறுநாள் காலையில் பார்த்தபோது ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு மர்மநபர்கள் உள்ளே சென்று பீரோவை உடைத்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் வரதராஜிடம் தகவல் தெரிவித்தார். வரதராஜ் தேவாரம் போலீசில் புகார் அளித்தார். கொள்ளைபோன பொருட்களின் மதிப்பு தெரியவில்லை. சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×