என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேவதானப்பட்டி அருகே சொத்துக்காக தந்தையை வெட்டிய மகன் கைது
Byமாலை மலர்8 Oct 2021 10:57 AM GMT (Updated: 8 Oct 2021 10:57 AM GMT)
தேவதானப்பட்டி அருகே சொத்துக்காக தந்தையை வெட்டிய மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே உள்ள ஆ.வாடிப்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 65). விவசாயி. இவருக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
மகன் தங்கவேல் (45) என்பவர் மட்டும் அதே ஊரில் வசித்து வருகிறார். பெருமாளின் மனைவி இறந்து விடவே அவரது பெயரில் உள்ள சொத்துகளை தனக்கு எழுதி தருமாறு தங்கவேல் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்று இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த பெருமாளை அரிவாளுடன் வந்து தங்கவேல் மிரட்டினார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே அரிவாளால் பெருமாளை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த பெருமாள் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவரது மகள் ஜெயபாக்கியம் ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தையை அரிவாளால் வெட்டிய தங்கவேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள ஆ.வாடிப்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 65). விவசாயி. இவருக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
மகன் தங்கவேல் (45) என்பவர் மட்டும் அதே ஊரில் வசித்து வருகிறார். பெருமாளின் மனைவி இறந்து விடவே அவரது பெயரில் உள்ள சொத்துகளை தனக்கு எழுதி தருமாறு தங்கவேல் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்று இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த பெருமாளை அரிவாளுடன் வந்து தங்கவேல் மிரட்டினார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே அரிவாளால் பெருமாளை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த பெருமாள் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவரது மகள் ஜெயபாக்கியம் ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தையை அரிவாளால் வெட்டிய தங்கவேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X