search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    அரசு பஸ் மோதி ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பலி

    மதுரை விமான நிலையம் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    அவனியாபுரம்:

    திருப்பரங்குன்றம் அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர் அழகர் (வயது 60), ஓய்வுபெற்ற அரசு ஊழியர்.

    இன்று காலை வேலை நிமித்தமாக இவர் பூவாள் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். மண்டேலா நகர் ரிங்ரோடு பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது திருச்செந்தூரில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக பூவாள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் நிலைதடுமாறி பின்னால் அமர்ந்திருந்த அழகர் கீழே விழுந்தார். அப்போது அரசு பஸ் அவர் மீது ஏறியதால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அழகர் பலியானார்.

    இந்த தகவல் அறிந்த அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கப்பாண்டி உள்ளிட்ட போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து பலியான அழகரின் உடலை பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×