என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேரளம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி இருந்த லாரியில், நெல் மூட்டைகள் திருடிய 2 பேர் கைது
Byமாலை மலர்7 Oct 2021 1:53 PM GMT (Updated: 7 Oct 2021 1:53 PM GMT)
பேரளம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி இருந்த லாரியில், நெல் மூட்டைகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்னிலம்:
பேரளம் ரெயில் நிலையத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்த வெளியில் நெல் சேமிப்பு கிடங்குகளில் உள்ள நெல்லை லாரிகள் மூலம் எடுத்து வந்து, அரவைக்காக சரக்கு ரெயிலில் ஏற்றி பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒரு லாரியில் நெல் மூட்டைகள் ஏற்றியபடி பேரளம் ெரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இரவு காவலராக பணி புரியும் சுரேஷ் என்பவர், காலையில் வந்து பார்த்தபோது 3 நெல் மூட்டைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து சுரேஷ், பேரளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டதில் பேரளத்தை அடுத்துள்ள திருமியச்சூர் கட்டளை தெருவை சேர்ந்த அருண் விக்னேஷ் (27), அதே ஊரை சேர்ந்த வினோத் (24) ஆகியோர் மூட்டைகளை திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அந்த 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X