search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    மேலூர் அருகே கார் மோதி வாலிபர் பலி- மற்றொருவர் படுகாயம்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேலூர்:

    மேலூர் முகமதியாபுரத்தைச் சேர்ந்தவர் ரஜினி மஸ்தான். இவரது மகன் முகமது ஆசிக் அலி (வயது 20). இவரது நண்பர் முகமது உவைஸ் (20).

    இவர்கள் இருவரும் நீட் தேர்வுக்காக படித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டனர்.

    மேலூர் அருகே உள்ள நாவினிபட்டி 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    தலையில் பலத்த காயமடைந்த முகமது ஆசிக் அலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முகமது உவைசை, அந்தப்பகுதியினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×