என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலும் 6 லட்சம் தடுப்பூசி இன்று சென்னை வந்தன
Byமாலை மலர்7 Oct 2021 10:00 AM GMT (Updated: 7 Oct 2021 10:00 AM GMT)
35 ஆயிரம் சிறப்பு முகாம்களுக்கு தேவையான தடுப்பூசிகளை இருப்பு வைக்க சுகாதாரத்துறை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 4 கட்டங்களாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு திட்டமிட்ட அளவைவிட தடுப்பூசிகள் அதிக அளவு செலுத்தப்பட்டுள்ளது.
அதனால் இந்த மாதமும் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. வருகிற 10-ந்தேதி 5-வது கட்டமாக சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.
இந்த முகாம்களில் 2-வது தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 20 லட்சம் பேருக்கு மேல் 2-வது தவணை தவறியவர்கள் இருப்பதாக தெரிய வருகிறது.
இதனால் அவர்களை இந்த சிறப்பு முகாம்களுக்கு கொண்டுவர சுகாதாரத்துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள முகாமிற்கு தேவையான அளவு தடுப்பூசி இருப்பு வைக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் 9 லட்சத்து 60 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன. இதையடுத்து இன்று 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன.
இதனை அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை தேவைக்கேற்ப அனுப்பி வருகிறது. 35 ஆயிரம் சிறப்பு முகாம்களுக்கு தேவையான தடுப்பூசிகளை இருப்பு வைக்கவும் சுகாதாரத்துறை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 4 கட்டங்களாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு திட்டமிட்ட அளவைவிட தடுப்பூசிகள் அதிக அளவு செலுத்தப்பட்டுள்ளது.
அதனால் இந்த மாதமும் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. வருகிற 10-ந்தேதி 5-வது கட்டமாக சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.
இந்த முகாம்களில் 2-வது தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 20 லட்சம் பேருக்கு மேல் 2-வது தவணை தவறியவர்கள் இருப்பதாக தெரிய வருகிறது.
இதனால் அவர்களை இந்த சிறப்பு முகாம்களுக்கு கொண்டுவர சுகாதாரத்துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள முகாமிற்கு தேவையான அளவு தடுப்பூசி இருப்பு வைக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் 9 லட்சத்து 60 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன. இதையடுத்து இன்று 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன.
இதனை அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை தேவைக்கேற்ப அனுப்பி வருகிறது. 35 ஆயிரம் சிறப்பு முகாம்களுக்கு தேவையான தடுப்பூசிகளை இருப்பு வைக்கவும் சுகாதாரத்துறை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X