search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    சட்டவிரோதமாக மது விற்ற 8 பேர் கைது

    கைதானவர்களிடமிருந்து 33 தமிழ்நாட்டு மதுபான பாட்டில்கள் மற்றும் பணம் ரூ.2382 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவுப்படி சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி மது, கள்ளச்சாராயம் மற்றும் கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்தநிலையில் மாவட்டம் முழுவதும் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 8 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து 33 தமிழ்நாட்டு மதுபான பாட்டில்கள் மற்றும் பணம் ரூ.2382 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 
    Next Story
    ×