என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துணி எடுப்பது போல் நடித்து ஜவுளிக்கடை உரிமையாளரின் செல்போனை திருடியவர் கைது
Byமாலை மலர்7 Oct 2021 7:37 AM GMT (Updated: 7 Oct 2021 7:37 AM GMT)
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மடத்துக்குளம்:
திருப்பூர் மாவட்டம் கணியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடத்துக்குளம் மெயின் ரோடு பகுதியில் அதே பகுதியை சேர்ந்த முஜிபூர் ரஹ்மான் என்பவர் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
வழக்கம் போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது கடைக்கு வந்த நபர் ஒரு உள்ளாடை எடுத்துவிட்டு ரூ.150 பணத்தை கொடுத்துவிட்டு செல்லும்போது மேஜையின் மீது வைத்திருந்த சுமார் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள உரிமையாளரின் செல்போனை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முஜிபூர் ரஹ்மான் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் அந்த நபரை பிடித்து பார்த்தபோது அவரது பாக்கெட்டில் செல்போன் இருந்துள்ளது.
விசாரித்தபோது அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து என்பவரது மகன் ரஞ்சித்குமார் (28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து முஜிபூர் ரஹ்மான் கணியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X