என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் அருகே 4 மாடுகள் திருட்டு
Byமாலை மலர்7 Oct 2021 7:11 AM GMT (Updated: 7 Oct 2021 7:11 AM GMT)
பக்கத்து தோட்டத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான பசு மாடு, அதன் கன்று ஆகிய 2 மாடுகளும் திருடப்பட்டிருந்தது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள காட்டூர் ஊராட்சி சோழியப்ப கவுண்டன்புதூரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது42) விவசாயி. கால்நடைகளும் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் 2 கறவை மாடுகளை மேய்ச்சல் முடிந்து தோட்டத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் கட்டி வைத்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை சென்று பார்த்தபோது கட்டப்பட்டிருந்த 2 மாடுகளையும் காணவில்லை. அக்கம்பக்கம் தேடியும் கிடைக்காததால் மாடுகள் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து
காமநாயக்கன்பாளையம் போலீசில் மோகன் புகார் செய்தார்.
இதேபோல அவரது பக்கத்து தோட்டத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான பசு மாடு, அதன் கன்று ஆகிய 2 மாடுகளும் திருடப்பட்டிருந்தது.
ஒரே பகுதியில் 4 மாடுகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X