search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    பல்லடம் அருகே 4 மாடுகள் திருட்டு

    பக்கத்து தோட்டத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான பசு மாடு, அதன் கன்று ஆகிய 2 மாடுகளும் திருடப்பட்டிருந்தது.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள காட்டூர் ஊராட்சி சோழியப்ப கவுண்டன்புதூரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது42) விவசாயி. கால்நடைகளும் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் 2 கறவை மாடுகளை மேய்ச்சல் முடிந்து தோட்டத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். 

    இந்தநிலையில் நேற்று காலை சென்று பார்த்தபோது கட்டப்பட்டிருந்த 2  மாடுகளையும் காணவில்லை. அக்கம்பக்கம் தேடியும் கிடைக்காததால் மாடுகள் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து
    காமநாயக்கன்பாளையம் போலீசில் மோகன் புகார் செய்தார்.

    இதேபோல அவரது பக்கத்து தோட்டத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான பசு மாடு, அதன் கன்று ஆகிய 2 மாடுகளும் திருடப்பட்டிருந்தது. 

    ஒரே பகுதியில் 4 மாடுகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். 
    Next Story
    ×