search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தென்காசி மாவட்டத்தில் மது விற்ற 15 பேர் கைது

    தென்காசி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில் விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தென்காசி:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள், போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில் விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 15 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 470 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×