search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    தாராபுரத்தில் இன்று காலை பரிதாபம் - மோட்டார் சைக்கிள் விபத்தில் நகைக்கடை அதிபர் பலி

    தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் குமரகுரு (வயது 26). இவர் தாராபுரம் பெரிய கடைவீதியில் நகைக்கடை நடத்தி வந்தார். 

    இன்று காலை அவர் தாராபுரம் அலங்கியம் சாலை சீத்தக்காடு இரட்டைப்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.  

    அங்குள்ள வளைவு ஒன்றில் திரும்பும் போது குமரகுருவின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோர வயலுக்குள் பாய்ந்தது. இதில்  தடுமாறி விழுந்த குமரகுருவின் தலை அங்குள்ள கல்லில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.  

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

    பின்னர் குமரகுரு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   
    Next Story
    ×