என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீடு கட்டி தருவதாக ரூ.14.5 லட்சம் மோசடி செய்தவர் கைது
Byமாலை மலர்6 Oct 2021 9:20 AM GMT (Updated: 6 Oct 2021 9:20 AM GMT)
பல்லடம் டி.என்.டி. நகரில் வசித்து வரும் ரத்தினவேல் மகன் முத்துகுமார் வங்கி மூலம் கடன் பெற்று வீடு கட்டி தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளார்.
அவினாசி:
அவிநாசி அருகே அய்யம்பாளையத்தில் அவிநாசியை சேர்ந்த பழனிசாமி, வெள்ளிங்கிரி ஆகியோர் 4 ஏக்கர் பரப்பளவில் வீட்டுமனை பிரிவை 2019ல் அமைத்துள்ளனர்.
இந்த இடத்தில் பல்லடம் டி.என்.டி. நகரில் வசித்து வரும் ரத்தினவேல் மகன் முத்துகுமார் வங்கி மூலம் கடன் பெற்று வீடு கட்டி தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளார்.
இதை நம்பி, திருப்பூர் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் (37) அவிநாசி அஞ்சல் நிலைய வீதியில் உள்ள முத்துகுமாரின் அலுவலகத்திற்கு சென்று வீடு வாங்குவதற்காக முன்பணமாக ரூ.1.85 லட்சம் செலுத்தி ரசீது பெற்றுள்ளார்.
இருப்பினும் ஓராண்டாகியும் வீடு கட்டித் தராமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். பிறகு முத்துகுமாரைத் தொடர்பு கொண்டபோது, அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததுடன் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. மேலும் இதுபோல அவர் 15க்கும் மேற்பட்டோரிடம் ரூ.14 லட்சத்து 65 ஆயிரம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் அவிநாசி போலீசார் முத்துகுமார் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X